புதன், 29 அக்டோபர், 2025

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!

தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!


1. தந்தைக்கு முன்பு குரலை உயர்த்தாதீர்கள்..!
அவ்வாறு செய்தால் இறைவன் உங்களை தாழ்த்தி விடுவான்..

2. தந்தையின் கண்டிப்பை பொறுத்து கொள்ளுங்கள்..!
அதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும்....

3. தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்..!
அதனால் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மரியாதை செய்யக்கூடும்..!

4. தந்தை சொல்வதை கவனமாக கேளுங்கள்..!
ஏனென்றால் பிறர் நமக்கு ஏதும் சொல்லும் நிலைமை வரக் கூடாது..

5.தந்தைக்கு முன்பு பார்வையை தாழ்த்தி கொள்ளுங்கள்..!

மக்கள் பார்வைக்கு முன்பு உயர்ந்த கண்ணியமாக காட்சியளிப்பீர்கள்..

6. தந்தையின் வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு தெளிவான ஒரு புத்தகம் ஆகும்..!

அந்த ஒவ்வொரு பக்கத்தைக் கொண்டு (பாடமாக) பயன் அடைந்து கொள்ளுங்கள்..

 தந்தை என்பவர், அனைவரையும் விட, மிக சிறந்த முறையில், நமக்கு நன்மை செய்யக்கூடியவர்...
மிகவும் அழகான முறையில் நம்மை பாதுகாக்க கூடியவர் ஆவார்...

அவரின் காலத்திலேயே அவருக்கு மரியாதை செய்வோம்...
அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளில், குறை வைத்து விட வேண்டாம்..

அவர் உன்னுடன் அருகில்
இருக்கும்போது அவருடைய
அருமை உனக்கு தெரியப்போவதுமில்லை.
Previous Post
Next Post

0 Comments: