செவ்வாய், 27 செப்டம்பர், 2022

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை

நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
NEERIN MUKKIYATHUVAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

இயற்கையின் வரமாக கிடைக்கும் நீரானது மனிதனுக்கு மட்டுமின்றி, பிற உயிர்கள், தாவரங்கள் என அனைத்திற்கும் அத்தியாவசிய தேவை ஆகும்.

நீரின் முக்கியத்துவம்
Neerin Mukkiyathuvam Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை
Table of Contents
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நீரின் பிறப்பிடம்
நீரின்றி அமையாது உலகு
நீர்விரயம்
நீரை பாதுகாக்க மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள்
முடிவுரை
நீரின் முக்கியத்துவம் பற்றிய கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
நீரின் பிறப்பிடம்
நீரின்றி அமையாது உலகு
நீர் விரயம்
நீரை பாதுகாக்க மேற்கொள்ளக் கூடிய வழிமுறைகள்
முடிவுரை
முன்னுரை
தண்ணீர் என்பது மனிதன் வாழ்வதற்கான மூலாதாரமாகும். உணவின்றி மனிதனால் சில நாட்கள் வாழமுடியம் ஆனால் நீரின்றி மூன்று தினங்கள் கூட வாழமுடியாது.

மனிதர்கள் மாத்திரமன்றி இங்கே படைக்கப்பட்டிருக்கின்ற தாவரங்கள், பறவைகள், விலங்குகள் என அனைத்து வகையான ஜீவராசிகளுக்கும் நீரானது மிகவும் அவசியமென்பது யாவரும் அறிந்த ஒன்று.


பூமியில் நீர் மூலாதாரம் இருப்பதனால் தான் மனித வாழ்க்கையும் பிற உயிரினங்களின் நிலவுகையும் சாத்தியமாகி இருக்கின்றது.

இக்கட்டுரையில் நீர் எவ்வாறு உருவாகிறது, அதன் முக்கியத்துவங்கள் மற்றும் நீர் விரயம் அதனை பாதுகாக்க என்ன செய்யலாம் என்பன தொடர்பாக நோக்கப்படுகிறது.

நீரின் பிறப்பிடம்
நீரானது ஒரு ஐதரசன் மற்றும் இரண்டு ஒட்சிசன் (H2O) மூலக்கூறுகளால் உருவான பங்கீட்டு வலுப்பிணைப்பாக அறியப்படுகிறது. பூமியில் 71 சதவீதமானது நீரினாலும் 29 சதவீதம் நிலத்தினாலும் உருவாகியுள்ளது.

இங்கு நீரின் சதவிகிதம் உயர்வாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் இவை தான் பூமியில் நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ள மூலங்களாகும்.

இங்கே உள்ள நீர் தான் பூமியை வரண்டு பாலைவனமாகாமலும் குளிர்ந்து பனிக்காடாக மாறாமலும் சமநிலையில் வைத்திருக்கின்றன.

இங்குள்ள நீர் ஆவியாகி, ஒடுங்கி, படிவு வீழ்ச்சியாகி, ஓடும் நீராகி மீண்டும் நீர்நிலைகளை அடையும் அவை மீண்டும் ஆவியாகும். இவ்வாறு ஒரு நீரியல் வட்டமாக பூமியை சமநிலையாக வைத்திருக்கிறது.

பூமியில் நீரானது திண்மம், திரவம், வாயு எனும் மூன்று நிலைகளில் காணப்படுகிறது. மனித உடலும் 60 சதவீதம் நீரினாலே உருவாகியுள்ளது. இவ்வாறு நீர் இங்கே பரந்து வியாபித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு

“நீர் இன்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு” நீர் இல்லையென்றால் இவ்வுலகமே இல்லை என்கிறார் திருவள்ளுவர். அந்தளவிற்கு நீரின் முக்கியத்துவமானது காணப்படுகிறது.

இங்கே மனித உடலில் நீரானது உடல் வெப்பநிலையை பேணவும் உடலில் உள்ள அனைத்து கலங்களுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

அது மட்டுமன்றி மூளையை ஒழுங்காக வேலை செய்ய வைக்கவும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற வைக்கவும் உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் தொழிற்படவும் நீரே ஆதாரமாக உள்ளது.

பூமியில் மனிதன் உயிர் வாழவும், அவன் அன்றாட பயன்பாடுகளுக்கும், விவசாய நடவடிக்கைகளுக்கும், எல்லா வகையான தொழிற்சாலைகளுக்கும், உணவு உற்பத்திகளுக்கும் நீரே ஆதாரம். இங்கு நீரில்லை என்றால் மனிதன் வாழவே இயலாது.

நீர்விரயம்

நீர் பூமிக்கு இயற்கையின் வரமாக வளிமண்டலத்தில் இருந்து மழையாக
கிடைக்கிறது.

மழைவீழ்ச்சியினால் ஆறுகள் உருவாகி குளங்களை நிரப்புகின்றன. தரைக்கீழ் நீராகவும் ஊடுவடிகின்றன. இவை இயற்கையின் நிகழ்வுகளாகும்.

மனிதன் தனது தேவைக்காக போதுமான நீரை எடுப்பதோடு நிறுத்தி விடாது தரைக்கீழ் நீரை பம்பிகள் மூலம் அதிகமாக உறிஞ்சுவதும்

நீர் நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதும் அசேதனங்கள் பார உலோகங்களை நீரில் கலந்து நீரை மாசுபடுத்துகிறான்.

ஆழமாக தரைக்கீழ் நீர் நுகர்வதால் கடல் நீர் உட்புகுந்து நீர் உவராகின்றது. அதிகளவான நீர் மாசடைதல் அண்மைக்காலங்களில் இங்கு அரங்கேறி வருகிறது.

இது நீர் பற்றாக்குறையை உண்டு பண்ணி மனிதனை அழிவுக்கு இட்டுசெல்கிறது.

நீரை பாதுகாக்க மேற்கொள்ள கூடிய நடவடிக்கைகள்
முன்னொரு காலத்தில் தலைசிறந்த நீர்மேலாண்மையயை எம் முன்னோர்கள் மேற்கொண்டனர். நீரை விரயமாக விடாது குளங்களும் ஏரிகளும் அமைத்து நீரை தேக்கி வைத்து நீர் வளத்தை பாதுகாத்தனர்.

அவற்றை தான் நாமும் செய்ய வேண்டும் நீர் நிலைகளை மாசடைய விடாது தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

அபிவிருத்தி எனும் பெயரில் நீர் தேக்கங்களை அழிவடைய செய்யாது பாதுகாக்க உரிய சட்ட நடவடிக்கைகளை அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

நீரை உறிஞ்சும் தொழிற்சாலைகளை மூட வேண்டும். இயற்கையான காடுகளை பாதுகாக்க வேண்டும். மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சிக்கனமான நீர்ப்பாசன முறைகளை பயன்படுத்த வேண்டும்.

நீரை பாதுகாக்காமல் விட்டால் மனித சமுதாயமே அழியும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவற்றினை விழிப்புணர்வூட்ட உலகமெங்கும் “மார்ச் 22” உலக நீர் தினம் கொண்டாடப்படுகிறது.

முடிவுரை
பூமியில் படைக்கப்பட்ட நீர் வளம் மிகப்பெறுமதியானது. அதனை மாசுபடுத்தவும் விரயமாக்கவும் செய்வது ஆகச்சிறந்த முட்டாள் தனமாகும்.

இன்றைக்கு எந்த ஒரு நாடு அதிக நீர் வளம் கொண்டதோ அதுவே சிறந்த நாடு எனும் அளவிற்கு தண்ணீரின் தட்டுப்பாடு மனிதகுலத்தை ஆட்டம் காண செய்துள்ளது. நாடுகள் தண்ணீருக்காக போராடும் நிலையானது உருவாகலாம்.

எனவே இன்றே விழித்து கொள்வோம் இயற்கையின் வரமான நீரை பாதுகாத்து வாழும் வகையறிந்து வாழ்வோம்.

நீரில்லையேல் உயிரில்லை என்றுணர்வோம் நீரை பாதுகாப்போம்.

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை

இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்
IYARKAI KAPPOM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்” பதிவை காணலாம்.

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார்கள் ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கின்றோம்.

இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொரு உயிர்களிதும் தலையாய கடமையாகும்.

இயற்கையை காப்போம் கட்டுரை
Iyarkai Kappom Katturai In Tamil
மரம் வளர்ப்போம் கட்டுரை
Table of Contents
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்
இயற்கையை காப்போம்
முன்னுரை
இயற்கையின் சிறப்பு
இயற்கை மாசடைதல்
இயற்கை அனர்த்தங்கள்
இயற்கையை பாதுகாத்தல்
முடிவுரை
இயற்கையை பாதுகாப்போம் கட்டுரை தமிழ்
இயற்கையை காப்போம்
முன்னுரை
இயற்கையின் சிறப்பு
இயற்கை மாசடைதல்
இயற்கை அனர்த்தங்கள்
இயற்கையை பாதுகாத்தல்
முடிவுரை
முன்னுரை
இந்த உலகமானது இயற்கையின் கொடைகளால் நிறைந்துள்ளது. இவ்வியற்கையின் கொடைகளுடன் இணைந்து வாழும் படியாகவே மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.


மனிதன் இப்பூமியில் நீடித்து வாழும் பொருட்டு இயற்கை அதன் கொடைகளை இவ்வுலகிற்கு வாரிவழங்கியுள்ளது. உண்கின்ற உணவில் இருந்து அருந்துகின்ற குடிநீர் வரை இயற்கை மனிதவாழ்வில் மிக முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

ஆனால் அண்மைக்காலமாக இயற்கையானது அளவிடமுடியா பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளது. அவற்றை நாம் கட்டுப்படுத்த வேண்டுமாயின் இயற்கையை பற்றி முதலில் அறிந்து கொள்ளவேண்டும்.

இயற்கையின் சிறப்பு
இந்த பூகோளமானது பரந்து விரிந்த நிலப்பரப்புக்களையும், அதன் நாற்புறமும் சூழப்பட்ட சமுத்திரங்களையும், பச்சைப்பசேலென்ற காடுகளையும், எழில்கொஞ்சும் நீர்வீழ்ச்சிகளையும், சலசலத்து ஓடுகின்ற ஆறுகளையும் வளங்களாக கொண்டமைந்துள்ளது.

அந்த வளங்களை அனுபவித்திட மனிதர்கள், விலங்குகள் மற்றும் ஏனைய உயிரினங்களையும் ஒருங்கமையப் பெற்றுள்ளது.

பூமியில் இவ்வுயிரினங்கள் நிலைபெற்று வாழ மழை, காற்று, தீ, நிலம், நீர் போன்ற பஞ்சபூதங்களையும் கொண்டமைந்துள்ளது.

இந்த இயற்கையானது செழித்து விளங்காவிட்டால் மனித இனமானது அழிவுற்றுவிடும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இயற்கையை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இயற்கை மாசடைதல்
இயற்கையில் உள்ள விலைமதிக்க முடியாத வளங்களான நிலம், நீர், காற்று போன்றன பல்வேறுபட்ட காரணங்களால் மாசடைதலே இயற்கை மாசடைதலாக கருதப்படுகின்றது.


இந்த மாசடைதலிற்கு அதிகரித்து வரும் தொழில்நுட்ப பயன்பாடு மற்றும் கைத்தொழில் மயமாக்கலோடு மனிதர்களது விரும்பத்தகா நடவடிக்கைகளும் காரணமாக அமைகின்றன.

உலகத்தின் அழகிய பரந்த நிலப்பரப்பானது பல்வேறுபட்ட காரணங்களால் அதன் இயல்புத் தன்மையை இழந்து வருகின்றது.

இறப்பர், பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் கழிவுகளை நிலத்தினுள் எரிக்கும் போதோ அல்லது புதைக்கும் போது மண்வளம் அற்றுப்போகின்றது. மேலும் இரசாயன கிருமி நாசனிகளை பயிர்களிற்கு தெளிக்கும் போது மண் மாசடைகின்றது.

அண்மைக்காலங்களில் சூழலை அச்சுறுத்திவரும் ஒரு செயற்பாடாக மண் அகழ்தல் இடம்பெற்று வருகின்றது. கடற்கரை மற்றும் ஆற்றுப்படுக்கையில் உள்ள மண் அகழ்வுக்கு உட்படும் போது நீரானது ஊர்மனைகளிற்குள் புகும் அபாயம் எழுந்துள்ளது.

நீரின் பயனை வள்ளுவர் “புறத்தூய்மை நீரான் அமையும்” என்று குறிப்பிடுகின்றார். மனித வாழ்க்கையில் மிகமுக்கியமான இடத்தை வகிக்கும் நீரானது குப்பை கூழங்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளை நீர்ர்நிலைகள் மீது கொட்டுவதாலும், நீர்நிலைகளை சரியாக பராமரிக்காததாலும் மாசடைகின்றது.

மேலும் ஆழ்துளைகிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சுவதனால் நிலத்தடி நீரானது அற்றுப்போகின்றது.

இந்த உலகத்தில் மனிதவாழ்க்கைக்கு அவசியமாய் விளங்கும் மற்றொரு காரணி வளி. ஏனெனில் எந்தவொரு மனிதனாலும் சுவாசிக்காமல் இருக்கமுடியாது.

இந்த வளியானது புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் அதிகபுகை மற்றும் நச்சுவாயுக்கள் கலக்கும் போது அசுத்தமடைகின்றது.

காடுகளை அழிப்பதனாலும் கனியவளங்களை அகழ்வதனாலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன.

இவ்வாறு இயற்கையின் கிடைத்தற்கரிய கொடைகள் மனிதசெயற்பாடுகளால் அழிவிற்குட்பட்டு வருகின்றன.

இயற்கை அனர்த்தங்கள்
இயற்கையானது மனித செயற்பாடுகளால் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாது, இயற்கையாகவே நிகழும் சில நிகழ்வுகளாலும் அழிவுக்குள்ளாகின்றது.

உதாரணங்களாக சுனாமி, சூறாவளி, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, பனிப்பொழிவு மற்றும் காட்டுத்தீ போன்றவற்றை குறிப்பிடலாம்.

மனிதனால் கட்டுப்படுத்த முடியாத இவ்வனர்த்தங்களால் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களும் அழிவடைகின்றன.

பல உயிர்களை காவுகொண்ட இயற்கை பேரழிவிற்கு உதாரணமாக 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்ப்பட்ட சுனாமியை குறிப்பிடலாம்.

இயற்கை அனர்த்தங்களாலும் விலை மதிக்க முடியாத இயற்கையானது அழிவிற்கு உள்ளாகின்றது.

இயற்கையை பாதுகாத்தல்
இயற்கையை பாதுகாப்பது தனிமனிதர்கள் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும்.

இயற்கை வளங்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்துவதற்காக ஒவ்வொரு நாடுகளிலும் பல்வேறு சட்டதிட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.

உலகிலுள்ள இயற்கை வளங்களை பாதுகாப்பதற்காக பன்னாட்டு பாதுகாப்பு சங்கம் 1980 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு உலகபாதுகாப்பு தினமாக ஒவ்வொரு வருடமும் யூலை மாதம் 28ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

மனிதர்கள் அனைவருமே இயற்கையை தேவைக்கேற்ப மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்த வேண்டும்.

நீரை வீண்விரயம் செய்யாது பயன்படுத்துவதோடு பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையை ஒட்டுமொத்தமாக குறைக்கவேண்டும்.

மரங்களை வெட்டுதலை தடுத்து நிறுத்துவதோடு எங்களால் இயன்றளவு மரங்களை வளர்த்து இப்பூமியை பசுமையானதாக மாற்றவேண்டும்.

முடிவுரை
செயற்கை அதிகம் மிகுந்த இவ்வுலகில் மனிதன் தனது மனநிம்மதியை திரும்பபெறுவதற்காக இயற்கையை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றான்.

இயற்கை சூழலில் வாழ்ந்த காலம் போய் இன்று இயற்கையை காண சுற்றுலா செல்லும் நிலைமையை மனிதன் எதிர்நோக்கியுள்ளான்.

இன்னும் சிலகாலம் இந்நிலைமை தொடருமாயின் இயற்கையோடு சேர்ந்து மனித இனமும் அழிந்து விடக்கூடிய அபாயம் உள்ளது.

இதற்கான உடனடியான தீர்வு இயற்கையை தேவைக்கேற்ப பயன்படுத்தி அதனைப் பாதுகாத்தலாகும்.

எனவே இயற்கைவளங்களை எதிர்கால சந்ததியினரும் பயன்படுத்தும் வகையில் உயிர்ப்போடு வைத்திருந்து நாமும் நலம் பெற்று வாழ்வோமாக.

காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை

காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
KATTU VALAME NATTU VALAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை” பதிவை காணலாம்.

இயற்கையின் சமநிலையை பேணி உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியதில் காடுகளிற்கு முக்கிய பங்கு உண்டு.

காடுகளின் பயன்கள் கட்டுரை
Table of Contents
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காடுகளின் முக்கியத்துவம்
இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
தமிழகக் காடுகளின் சிறப்பு
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
முடிவுரை
காட்டு வளமே நாட்டு வளம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
காடுகளின் முக்கியத்துவம்
இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
தமிழகக் காடுகளின் சிறப்பு
காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
முடிவுரை
முன்னுரை
இயற்கை நமக்களித்த அற்புதப் படைப்புக்களில் காடுகள் முதன்மை வகிக்கின்றன. காடுகள் செழிப்பாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும்.

இதனால்தான் “காட்டின் வளமே நாட்டின் வளம்ˮ⸴ “காடழிந்தால் நாடழியும்ˮ போன்ற பழமொழிகளைக் கூறுவர். புவி மேற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி காடுகளே ஆகும். இது இடப்பரப்பு மட்டுமல்ல மனித உயிர் வாழ்க்கைக்கு இதுவே ஆதாரமாகும்.


“மணிநீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண்ˮ என்கிறார் வள்ளுவர்.

நீலமணி போன்ற நீளமுடைய அகழியும்⸴ வெட்டவெளியான நிலப்பரப்பும்⸴ உயரமான மலையும் மரநிழல் செறிந்த காடுகளும் கொண்டதே அரண் என்கின்றார். ஒரு காடு வளமாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்கும் என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

காடுகளின் முக்கியத்துவம்
உயிரின பாதுகாப்பில் காடுகளின் பங்கு மகத்தானது. “ஒருமுறை உயிர் கொடுத்தால் தாய் ஒவ்வொரு முறையும் உயிர் கொடுக்கின்றது மரம்”. இயற்கைச் சமநிலையைப் பேணிக்காக்க காடுகள் அவசியமாகின்றன.

உலக வெப்பத்தை குறைக்கவும்⸴ பசுமையைப் பேணவும் காடுகள் முக்கியமாகின்றது. பறவைகள்⸴ விலங்குகள் உட்பட உயிரின பாதுகாப்பிற்கும்⸴ வாழ்விடங்களிற்கும் காடுகள் முக்கியம் வகிக்கின்றன.

இந்தியக் காடுகளின் தனிச்சிறப்பு
உலகளாவிய ரீதியில் இந்திய காடுகளுக்கு தனிச்சிறப்பு உண்டு அடர்த்தியான பல்லுயிர்ப் பெருக்க காட்டுப் பகுதிகள் 25 உலகில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று இந்தியாவிலுள்ளது.

உலகில் காணப்படும் 12 பல்லுயிர் பெருக்க மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். உலகளாவிய ரீதியில் 30 வகையான செம்மரங்கள் உள்ளன. அவற்றில் நான்கு வகை மரங்கள் இந்தியாவில் காணப்படுகின்றன.

உலக நிலப்பகுதியில் 2.5% ஐ பெற்றுள்ளது நம் நாடு. அதேசமயம் உலக இயற்கை வளத்தில் 6% விடக் கூடுதலான வளம் இந்தியாவிலுள்ளது. தேசம் பெருமை கொள்ள வேண்டிய இந்த நேரத்தில் சூழலியல் பாதுகாப்பில் மற்றைய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவுக்கு அதிக பங்குள்ளதை தெளிவுபடுத்துகின்றது.

தமிழகக் காடுகளின் சிறப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சுற்றுச்சூழல் திட்டத்தின்படி ஒவ்வொரு நாட்டிலும் அந்நாட்டின் மொத்த பரப்பளவில் 33% காட்டுவளம் இருக்க வேண்டும்.

எனினும் தமிழகத்தில் 5 தேசிய பூங்காக்கள்⸴ 10 வனவிலங்கு சரணாலயங்கள்⸴ 14 பறவைகள் சரணாலயங்கள்⸴ 4 புலிகள் காப்பகம்⸴ 4 யானைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கதாகும்.

இந்தியாவில் காணப்படும் 14672 பூக்கும் தாவரங்களில் 5640 தாவரங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. இதில் பெரும்பாலானவை அரிய வகைத் தாவரங்களாகும்.

காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள்
இன்று காடுகள் மனித தேவைகளுக்காகவும்⸴ இயற்கை அனர்த்தங்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. நீருக்கான ஆதாரங்கள் இல்லாமல் போய்விடுகின்றது. மண்சரிவு⸴ மண்ணரிப்பு ஏற்படுகின்றது. இதனால் வளம்மிக்க மண்கள் அழிக்கப்படுகின்றன.

வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்படுகின்றது. பல அரிய மூலிகைகள் அழிந்து விடுகின்றன. காற்று மாசுபடுகின்றன. வளிமண்டலத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து காபனீரொட்சைட் அதிகரிப்பதனால் பசுமைக் கூடார விளைவு ஏற்படுகின்றது.

துருவப் பகுதிகளில் பனிக்கட்டி உருகுதல். இதனால் கடல் மட்டம் உயர்வடைதல் போன்ற பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

முடிவுரை
ஒரு நாட்டில் காட்டுவளம் செழிப்பாக இருப்பின் நாடு வளம் பெறும். காடுகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். மரங்கள் அழிக்கப்படும் போது அதற்கு பதிலாகப் பல மரங்களை நாட்ட வேண்டும்.

காட்டின் அவசியத்தை இந்திய அரசு உணர்ந்ததால் தான் மத்திய-மாநில அரசுகள் திட்டங்களை வகுத்துள்ளன. இதற்கு நாமும் ஒத்துழைப்பு கொடுத்து காடுகளைக் காக்க வேண்டும். “காட்டு வளமே நாட்டின் வளம்ˮ எனவே அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுவோம்.

மரம் இயற்கையின் வரம் கட்டுரை

மரம் இயற்கையின் வரம் கட்டுரை
MARAM IYARKAIYIN VARAM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் இயற்கை சமநிலையை பேணும் “மரம் இயற்கையின் வரம் கட்டுரை” பதிவை காணலாம்.

மனித குலத்தின் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்ற மரங்களை மனிதர்கள் அழிப்பதனால் இன்று பூமியில் காலநிலை மாற்றமானது உருவாகியுள்ளது.

Table of Contents
மரம் இயற்கையின் வரம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
ஆக்சிஜன் மூலாதாரம்
உயிர்களின் வாழ்விடம்
மரங்களின் பயன்கள்
மரங்களின் இழப்பு
முடிவுரை
மரம் இயற்கையின் வரம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
ஆக்சிஜன் மூலாதாரம்
உயிர்களின் வாழ்விடம்
மரங்களின் பயன்கள்
மரங்களின் இழப்பு
முடிவுரை
முன்னுரை
இந்த பிரபஞ்சத்தின் அழகான அதிசயங்கள் பல நாம் வாழ்கின்ற பூமியிலே காணப்படுகின்றன. அவற்றில் மரங்கள் தனித்துவமானவை.

மனிதர்களை போல நகரவோ பேசவோ முடியாதவை என்றாலும் இவை இன்றி மனிதர்களால் வாழ முடியாது. மனிதர்கள் துணையின்றி மரங்கள் வாழந்துவிடும் ஆனால் மனிதர்கள் வாழ மரங்கள் மிகவும் அவசியமானவையாகும்.


பச்சை பசேல் என்று இந்த பூமியை அழகாக்கி எண்ணற்ற பல பயன்களை மனிதர்களுக்கும் பிற உயிர்களுக்கும் தந்து கொண்டிருப்பதனால் மரங்களை வரங்கள் என்றே கூறவேண்டும். இக்கட்டுரையில் மரங்களின் அவசியம் மற்றும் பயன்கள் பற்றி நாம் நோக்கலாம்.

ஆக்சிஜன் மூலாதாரம்
இந்த உலகத்திலே பலவகையான உயிரினங்கள் இங்கே வாழ்கின்றன. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ் அங்கிகள் என எல்லா உயிரினங்களும் சுவாசிக்க பிராண வாயு எனப்படும் ஒட்சிசன் மிகவும் அவசியமானதாகும்.

ஒட்சிசன் வாயு கிடைக்காவிட்டால் இங்கே எம்மால் உயிர்வாழ முடியாது. அத்தகைய வாயுவை வளிமண்டலத்துக்கு அதிகம் வெளியிடுவது தாவரங்கள் தான்.

வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட் வாயுவை தாவரங்கள் சுவாசித்து பின்பு ஒட்சிசனை இந்த சூழலுக்கு வெளிவிடுவதன் மூலமாக இந்த பூமியை சமநிலையாக வைத்திருக்கின்றன.

உயிர்களின் வாழ்விடம்
இந்த மரங்கள் இங்கே பல கோடி உயிரினங்களின் வாழ்விடமாக விளங்குகின்றன. காடுகள் தான் வனவிலங்குகளின் வதிவிடம் மனிதன் கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் காடுகளில் தான் வாழ்ந்தான். மரங்களின் பொந்துகளிலும் கிளைகளிலும் அவற்றின் நிழலிலும் தான் இவை காலம் காலமாக வாழ்ந்து வருகின்றன.

பறவைகள் மரங்களின் கிளைகளில் கூடு கட்டி வாழ்கின்றன. கூட்டம் கூட்டமாக பல உயிரினங்கள் இந்த மரங்களை நம்பியே வாழ்கின்றன.

சூழலின் உணவு சங்கிலியானது உற்பத்தியாக்கி எனும் தாவரங்களில் இருந்து துவங்குகின்றது. இவை தான் ஒரு பெரிய உணவு வலையை கட்டமைக்கின்றது எனலாம்.

மரங்களின் பயன்கள்

மரங்களின் பயன்கள் எண்ணிலடங்காதவையாகும். நாம் உண்பதற்காக பழங்களையும் கிழங்குகளையும் தானியங்களையும் இவை தருகின்றன. எமது வாழ்விடங்களை அமைத்து கொள்ள மரங்கள் பயன்படுகின்றன.

நாம் சுவாசிக்க சுத்தமான காற்றை தருகின்றன. இங்கே மழை உருவாகவும் மரங்களே காரணமாய் அமைகின்றன.

பல நோய்களை குணப்படுத்துகின்ற மருந்துகளை சில தாவரங்களே வழங்குகின்றன. அழகான பாதுகாப்பான நிழல் தரும் மரங்கள் கோடைகாலத்தின் வரப்பிரசாதங்கள் என்றே கூறலாம். இவ்வாறு மரங்களின் பயன்கள் எண்ணற்றவையாகும்.

மரங்களின் இழப்பு
இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டில் உலக நாடுகள் அபிவிருத்தியை இலக்காக கொண்டு நகராக்கம் மற்றும் கைத் தொழில் நடவடிக்கைகளை அதிகம் முன்னெடுப்பதால் காடுகளை அதிகம் அழிக்க துவங்கி விட்டனர்.


இதன் விளைவால் அதிகளவான மரங்கள் இங்கே அழிக்கப்படுகின்றன. இதன் காரணமாக பல பாதகமான சூழல் தாக்கங்கள் இங்கே நிகழ துவங்கியுள்ளன.

எங்கு பார்த்தாலும் கட்டடங்களாக மாறியுள்ள இன்றைய காலத்தில் மரங்களை காண்பது அரிதாகி விட்டது.

முடிவுரை
மனித குலத்தின் பாதுகாப்பு கவசமாக விளங்குகின்ற மரங்களை மனிதர்கள் அழிப்பதனால் இன்று பூமியில் காலநிலை மாற்றமானது உருவாகியுள்ளது. இதன் காரணமாக பலவகையான ஆபத்தான அனர்த்தங்கள் இடம்பெறுகின்றன.

இவை அனைத்தும் மனிதன் இயற்கையின் வரமான மரங்களை அழிப்பதன் விளைவால் உருவானவையே. மனிதர்கள் இன்று மரங்களின் அவசியத்தை சிறிது சிறிதாக உணர ஆரம்பித்துள்ளனர்.

இனிவரும் காலங்களிலாவது மரங்களை பாதுகாத்து எமது வருங்கால சந்ததியினரும் வாழும் சூழலை உருவாக்குவோம்.

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை

மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை
MARAM VALARPOM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை” பதிவை காணலாம்.

மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவு என்பதை உணர்ந்து, மரங்களை வளர்க்க வேண்டும்.

Table of Contents
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்
மரங்களின் நன்மைகள்
மரங்களின் அழிப்பு
மரங்களின் அழிப்பால் ஏற்படும் பாதிப்புக்கள்
முடிவுரை
மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்
மரங்களின் நன்மைகள்
மரங்களின் அழிப்பு
மரங்களின் அழிப்பால் ஏற்படும் பாதிப்புக்கள்
முடிவுரை
முன்னுரை
மரங்களே இயற்கை நிலத்தோற்றத்தின் மிக முக்கிய அம்சங்களாகும். அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்முடையதாகும். ஆனால் நாம் நம் சுயநலத்திற்காக மரங்களை வெட்டியும் காடுகளை அழித்தும் நம்மை நாமே அழித்து வருகின்றோம்.

அடுத்த தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்தால் மட்டும் போதாது அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நல்ல காற்று தேவை அது மரங்களின் மூலம் தான் கிடைக்கும்.


எனவே அதற்கு செய்ய வேண்டியது மரம் வளர்ப்பதுதான். இக்கட்டுரையில் மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம் பற்றி நோக்கலாம்.

மரங்கள் வளர்ப்போம் மழை பெறுவோம்
“விசும்பின் துளிவிழின் அல்லால் மற் றாங்கே பசும்புல் தலை காண்பது அரிது” என்கின்றது உலகப்பொதுமறை. உலகில் உயிர்கள் உய்வதற்கு மழை நீரே ஆதாரமாய் இருக்கின்றது.

பூமிப்பந்து உயிர் கோலமாய் தொடர்வதற்கு மழை பெய்வதே அடிப்படைக் காரணமாகும். இயற்கையில் கிடைக்கும் தூய்மையான நீர் மழை நீரே. அதனை சேமித்து வைப்பது ஒவ்வொருவரின் கடமையாகும்.

தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்துவதோடு மழை நீரையும் சிக்கனமாக பயன்படுத்துவது அவசியமாகும்.

மரங்களின் நன்மைகள்
மரங்கள் பூமிக்கும், மனிதனுக்கும் பல நன்மைகளைத் தருகின்றன. மரங்கள் மனித உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குகின்றன. மனிதன் சுவாசிக்க காற்றைத் தருபவை மரங்களே.

மனிதன் இளைப்பார மரங்கள் நிழல் தருகின்றன. மேலும் மரங்கள் வளிமண்டலத்திற்கு நீரை அனுப்பி மழையைப் பொழியச் செய்கின்றன. சூரிய கதிர்வீச்சு, வேகமான காற்று போன்றவற்றில் இருந்து மனிதனை பாதுகாக்கின்றன.

மரங்கள் மண்ணைப் பசுமையாக்குகின்றன. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் வாழ்விடமாகத் திகழ்கின்றன. நாம் பயன்படுத்தும் மேசை, கதிரை, கட்டில் முதலான பல பொருட்களை உருவாக்கப் பயன்படுகின்றன.


காய்கறிகள், தானியங்கள், பழங்கள் முதலானவற்றை தருகின்றன. காய்ந்த மரங்கள் கூட எரிபொருளாகப் பயன்படுகின்றன.

மரங்களின் அழிப்பு
மரங்கள் மனித செயற்பாடுகளால் அளிக்கப்பட்டு வருகின்றன. சேனைப் பயிர் செய்தல், கட்டுமானம், குடியிருப்பு அமைத்தல், தொழிற்சாலைகளை அமைத்தல், சாலை விரிவாக்கம், சாலைகள் அமைத்தல், விமான நிலையங்கள் அமைப்பது, சுரங்கப் பணிகள் உள்ளிட்ட பல நடவடிக்கைகளுக்காக மரங்கள் அழிக்கப்பட்டுகின்றன.

இதனால் மனிதகுலம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. காட்டுத்தீ, நிலச்சரிவு, நிலநடுக்கம், சூறாவளி, வெள்ளப்பெருக்கு முதலான இயற்கைக் காரணங்களாலும் மரங்கள் அழிக்கப்படுகின்றன.

மரங்களின் அழிப்பால் ஏற்படும் பாதிப்புக்கள்
முற்காலத்தைப் போல் இல்லாமல் மனித வாழ்க்கை மிகவும் மோசமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. மரங்களை வெட்டுவதே இன்றைய காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.

பயிர் செய்யும் நேரத்தில் வறட்சியும், அறுவடை நேரத்தில் புயலும் வருகின்றன. வெப்பம் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.

பயிர் நிலங்கள் தரிசு நிலங்களாகவும், பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் வறண்டும் கிடக்கின்றன. இதனால் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்படுகின்றன.

முடிவுரை
மரங்களின் அழிவு மனிதர்களின் அழிவு என்பதை உணர்ந்து, மரங்களை வளர்க்க வேண்டும். குறைந்தபட்சம் நாம் மருந்துச் செடிகளையாவது வளர்க்க வேண்டும்.

துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்க்கலாம். அவை கொசுக்களை விரட்டும், காற்றைத் தூய்மையாக்கும்.

எதிர்காலத்தில் தண்ணீரைப் போல் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டியேற்படும். எனவே மரம் இல்லையேல் மனித இனம் இல்லை என்பதை உணர்ந்து, மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்‼

திங்கள், 26 செப்டம்பர், 2022

குடி குடியை கெடுக்கும் கட்டுரை

குடி குடியை கெடுக்கும் கட்டுரை
KUDI KUDIYAI KEDUKKUM KATTURAI IN TAMIL

இந்த பதிவில் “குடி குடியை கெடுக்கும் கட்டுரை” பதிவை காணலாம்.

மதுபழக்கம் ஒருவரது நல்வாழ்வை சீரழித்து சிந்திக்கும் திறனை சிதைத்து தவறான பாதையில் அந்த நபரை இட்டு செல்ல வழிவகுக்கின்றது.

இன்று மதுப்பழக்கம் ஒரு நாகரிகமாக பார்க்கப்படுவது வேதனை தருவதாக இருக்கின்றது.

Table of Contents
குடி குடியை கெடுக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மது பழக்கமும் சமூக சீர்கேடும்
இளந்தலைமுறையினரும் மதுப்பாவனையும்
உடல் நலக்கேடுகள்
குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுபழக்கம்
குற்ற செயல்கள்
முடிவுரை
குடி குடியை கெடுக்கும் கட்டுரை
குறிப்பு சட்டகம்
முன்னுரை
மதுபழக்கமும் சமூக சீர்கேடும்
இளந்தலைமுறையினரும் மது கலாச்சாரமும்
உடல் நலகேடுகள்
குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுப்பழக்கம்
குற்ற செயல்கள்
முடிவுரை
முன்னுரை
“குடி குடியை கெடுக்கும்” என்று கூறுவார்கள் அதாவது மது பழக்கம் உயிரை குடிப்பதோடு அவர்களை சார்ந்தவர்களது வாழ்வையும் நாசமாக்கிவிடும் என்பது கருத்தாகும்.


பார்க்கின்ற இடமெல்லாம் “மது அருந்துதல் உடல் நலத்துக்கு கேடு” என்று எச்சரிப்பையும் உச்சரிப்பையும் காணலாம் ஆனால் மது பழக்கம் நமது சமூகத்தில் குறைவதாய் இல்லை அதிகரித்தவாறே செல்கின்றது.

அரசுகளோ அவற்றை தடை செய்வதாய் இல்லை மது பழக்கம் வாழ்வையே அழிக்கும் என்பதனை அறிந்தும் எமது சமூகம் அதற்கு அடிமையாகிதான் இருக்கிறது.

இக்கட்டுரை மதுப்பாவனையால் ஏற்படும் பிரச்சனைகள் அது தொடர்பான விழிப்புணர்வுகள் தொடர்பாக நோக்குகிறது.

மது பழக்கமும் சமூக சீர்கேடும்
எமது தமிழ் சமுதாயம் வாழ்க்கையில் ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற ஓர் உயரிய விழுமியத்தின் வழி வந்ததாகும். முன்னொரு காலத்தில் நம் முன்னோர்கள் பஞ்சமா பாதகங்களில் ஒன்றாக மது அருந்துதலை பார்த்தனர்.

ஒரு சமூகத்தில் மது அருந்துபவர் அருவருக்கப்பட்டு ஒதுக்கப்படுவார். ஒழுக்கம் தவறியவராக பார்க்கப்படுவார் ஆனால் இன்று நிலமை தலை கீழாக மாறிவிட்டது. மேற்கத்தைய கலாச்சார தாக்கம் இன்று சிறுவர்கள் பெண்கள் பெரியவர்கள் என்ற வேறுபாடில்லாமல் அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கி விட்டது.

இது ஒரு மாபெரும் ஒழுக்க சீர்கேட்டு பிறழ்வு என்று கூறலாம். மதுபாவனை இல்லாது இருக்கும் இளைஞர்களே அருகிவிட்டனர்.

மதுபழக்கம் ஒருவரது நல்வாழ்வை சீரழித்து சிந்திக்கும் திறனை சிதைத்து தவறான பாதையில் அந்த நபரை இட்டு செல்ல வழிவகுக்கின்றது. இது தொடர்பாக எமது சமூகம் பல எதிர்ப்புக்களை செய்தாலும் பயனேதுமில்லை.

இளந்தலைமுறையினரும் மதுப்பாவனையும்

“இளம் கன்று பயமறியாது” என்று கூறுவார்கள் அது போல எதிர்காலத்தில் அந்த தேசங்களை அலங்கரிக்க போகும் இளைஞர்கள் மது பழக்கத்துக்கு அடிமையாகுவதனால் அவர்களது கல்வி சிதைக்கப்பட்டு அவர்களது கனவுகள் மண்ணோடு மண்ணாக்கப்படுகின்றன.

இவர்களை சமூக விரோதிகளாக மாற்றிய பெருமை மதுவையே சாரும் இவ்வாறு தமது இளம்பராயத்தில் தவறான சகபாடிகளோடு சேர்ந்து தவறான வழியில் செல்வதனால் அவர்களது குடும்பம் மற்றும் உறவினர்கள் மிகுந்த பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகின்றது. இந்த நிலை எம்முடைய தேசங்களின் பெரும் சாபக்கேடாக உள்ளது.

உடல் நலக்கேடுகள்
இந்த மனித வாழ்க்கை எவ்வளவு அழகானது. அன்பான குடும்பம் நல்ல நண்பர்கள் சக மனிதர்கள் என விரிந்து செல்லும் மனித வாழ்க்கை ஒரு அபூர்வம் அதோடு இந்த இளமை பராயம் வானவில்லை போன்றது மிகவும் இளம் வயதில் மகிழ்வாக குடும்பங்களோடு வாழ்வது வரம் என்றே கூறலாம்.

தானும் தன்னை சார்ந்தவர்களையும் மகிழ்வாக வைத்திருப்பது ஒவ்வொரு ஆணுடைய கடமையாகும்.


ஆனால் மதுவுக்கு அடிமையாகி இளைஞர்கள் சிறிய பராயத்தில் இரத்த அழுத்தம், கொலாஸ்ட்ரோல், நீரிழிவு, சிறுநீரக நோய், நுரையீரல் நோய், கல்லீரல் நோய், கேன்சர், இதய நோய் என பல வகையான நோய்களுக்கு ஆளாகி தன்னுடைய ஆரோக்கியத்தை தானே கெடுத்து கொண்டு தனது குடும்பத்தையும் வேதனை அடைய செய்கின்றனர். இது பல குடும்பங்களின் சாபமாகும்.

குடும்ப உறவுகளை சிதைக்கும் மதுபழக்கம்
குடும்ப உறவுகளை போல பெறுமதியான விடயம் இந்த உலகில் வேறொன்றுமில்லை. ஆனால் மதுவுக்கு அடிமையானவர்கள் வீட்டில் தினமும் சண்டை சச்சரவு பிரச்சனைகள் தோன்றுவதால் குடும்ப உறவுகளிடையே விரிசல் உருவாகும்.

அன்பு பாசத்துக்கு பதிலாக வெறுப்பும் வேதனையும் தோன்ற இது காரணமாக உள்ளது. குடும்பங்களில் தோன்றும் இவ்வகை பிரச்சனைகள் வறுமை, கடன் போன்றவற்றை உருவாக்கி குழந்தைகளின் கல்வி எதிர்காலம் என்பவற்றையும் பாழாக்கிவிடும்.

குற்ற செயல்கள்
நாட்டில் இடம்பெறும் அதிகளவான குற்ற செயல்களுக்கு மதுப்பாவனையே காரணமாகும். மது மனித உடலின் குருதியோட்டத்தை விரைவுபடுத்துவதனால் உண்டாகும் போதையும் வேகமும் கொலை, கொள்ளை, வன்முறைகள், விபத்து போன்ற குற்றங்கள் இடம்பெற காரணமாக உள்ளது.

மனிதன் தனது நிதானத்தை இழப்பதால் மிருகத்தனமாக மாறுகின்றான். மது அருந்தி விட்டு வாகனம் செலுத்துவதனால் வீதி விபத்துக்கள் ஏற்பட்டு அதிக மரணங்கள் சம்பவிக்கின்றன.

நாட்டின் உயர் அதிகாரிகள், பொலிஸ், ஆசிரியர்கள் போன்றவர்கள் கூட மதுப்பாவனை உடையவர்களாக இருப்பதனால் தான் நாட்டில் அதிக ஊழல், லஞ்சம் போன்ற பிரச்சனைகள் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது.

முடிவுரை
இன்றைய சமுதாயத்தில் இந்தளவிற்கு வன்முறைகள், தீயகுணங்கள், தவறான செயல்கள் மலிந்து செல்வதற்கு முக்கிய காரணமாக மது பழக்கம் காணப்படுகிறது.

இன்றைக்கு நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக மதுபானம் மாறிவிட்டது. இது ஒரு அழிவின் ஆரம்பம் என்று கூறலாம்.

இந்த முட்டாள் தனமான போதை பழக்கத்துக்கு அடிமையாகாகமல் என்று எமது சமுதாயம் விடுபடுகின்றதோ அன்றே எமக்கு சுதந்திரம் சாத்தியமாகும்.

மது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் தீங்கு விளைவிப்பதனால் இதனை எமது சமுதாயத்தில் இருந்து இல்லாதொழிக்க வேண்டும்.