செவ்வாய், 20 செப்டம்பர், 2022

பகவத் கீதை பொன்மொழிகள்

பகவத் கீதை பொன்மொழிகள்
BHAGAVAD GITA QUOTES IN TAMIL

இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான பகவத் கீதை பொன்மொழிகள்.

பகவத் கீதை பொன்மொழிகள்
Bhagavad Gita Quotes In Tamil
பகவத் கீதை பொன்மொழிகள்
உங்கள் வாழ்க்கையானது
எண்ணப்படியே அமையும்..
எண்ணத்தை எப்போதும்
தூய்மையாக வைத்திருங்கள்.

சந்தர்ப்பமும் சூழ்நிலையும்
நல்லவர்களை கெட்டவர்களாக்கி
கெட்டவர்களை உத்தமர்களாக்கி
நிற்க வைத்து விடும்.. ஆனால்
உண்மை ஒருநாள் உலகறிய
வெளிவந்தே தீரும் அப்போது
யார் யார் எப்படி என்ற
மாயை விலகும்.

காமம், கோபம், பேராசை என்ற
மூன்று கதவுகளை கொண்டது
நரகம். இவை ஆத்மாவை
அழிப்பவை. எனவே இம்மூன்றையும்
விலக்க வேண்டும்.

உண்பதிலும் நடமாடுவதிலும்
தூங்குவதிலும் விழித்திருப்பதிலும்
அளவோடு இருப்பவன் துன்பம்
இல்லாமல் இருப்பான்.

காலங்கள் மாறினாலும்
நம் நிலைகள் மாறினாலும்..
நாம் கொண்ட இலட்சியத்தை
ஒருபோதும் மாற்றக்கூடாது.

உன் தோழனை அளவாக நம்பு
ஒரு நாள் அவன் உன் எதிரி
ஆகலாம். உன் பகைவனை
அளவோடு வெறு அவன்
ஒரு நாள் உனக்கு தோழனாக
மாறலாம்.


பெற்ற தாய் தந்தையை கைவிட்டவன்
எத்தனை தான தர்மங்கள் செய்தாலும்
வீண்.. அவன் செய்யும்
பிராத்தனைகளை இறைவன்
ஏற்பதில்லை.

சிக்கனம் என்பது பணத்தை
குறைவாக செலவு செய்வது அல்ல..
சிக்கனம் என்பது எவ்வளவு
பயனுள்ளதாக செலவிடுகிறோம்
என்பதை பொறுத்தது ஆகும்.

பெருமையோ இகழ்ச்சியோ தானாக
வருவதில்லை. உங்கள் கடமையை
செய்யுங்கள் எல்லாமே அதில்தான்
அடங்குகின்றன.

வாழ்வில் அனைத்தையும்
இழந்துவிட்டோம் என்று
நினைக்கும் போது ஒன்றை
மறக்காதீர்கள்.. எதிர்காலம்
என்ற ஒன்று நிச்சயம்
உள்ளது என்பதை.

செய்வினை என்பது நிச்சயமான
ஒன்று. நீங்கள் யாருக்கு எதை
செய்தாலும் அது இரட்டிப்பாக
திரும்ப கிடைக்கும்.
அது நன்மையாக இருந்தாலும் சரி.
தீமையாக இருந்தாலும் சரி.


தனியாக இருப்பதாக
கவலை கொள்ளாதே.. இறைவனே
உன்னுடன் இருக்கிறான் என்பதை
நினைவில் கொள்.

உன்னை யாரவது
அவமானப்படுத்தினால்
மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாதே
நீ தூக்கி எறியப்படும் போது இறைவன்
உன்னை தூக்கி விடுகிறான் என்பதை
மறந்து விடாதே.

நீ பிறரிடம் எதிர்பார்க்கும் அன்பு..
மரியாதை.. போன்றவைகளை
பிறர் எதிர்பார்க்கும் முன் அதை
அவர்களுக்கு கொடுத்தால்
உனக்கானது (அன்பு, மரியாதை)
உன்னை தேடி வரும்.

மனத்தெளிவு பெற்றவனிடமிருந்து
எல்லா துக்கங்களும்
விலகுகின்றன.

உனக்கு உதவி செய்தவரை
உன் வாழ்வில் எப்பொழுதும்
மறக்காதே.

உன் மீது தவறு இருக்கும் போது
அடுத்தவர் மீது கோபம்
கொள்ளாதே.

எந்த உயிர்கள் மீதும் வெறுப்பு
இல்லாமல் எல்லா உயிர்களிடத்திலும்
அன்பும் கருணையும் உடைய
ஒருவன் எனக்கு மிகவும்
பிரியமானவன்.


எதை நீ அதிகம் விரும்புகிறாயோ..
அதை நீ விரைவில் வெறுப்பாய்.

எதிர்பார்ப்புகள் சில நேரங்களில்
ஏமாற்றங்களையே தரும்.
கடமையை செய்து பலனை
எதிர்பாராமல் இருப்பதே
அநேக அற்புதங்களுக்கு
வழிவகுத்திடும்.

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இந்த “பகவத்கீதை பொன்மொழிகள்” பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.


சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்

சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்
சிக்கனம் சிறுசேமிப்பு கவிதை

இந்த பதிவில் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான “சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்” பற்றி பார்க்கலாம்.

சிக்கனம் மற்றும் சேமிப்பு பொன்மொழிகள்
சிக்கனம் சிறுசேமிப்பு கவிதைகள்
சேமிப்பு பொன்மொழிகள் (சிக்கனம்)
இளமையில் உன் சேமிப்பு மட்டுமே
முதுமையில் உனக்கு கை கொடுக்கும்.
அடுத்தவரை நம்பி வாழும்
வாழ்க்கை நரகம் போன்றது.

நேரத்தையும் பணத்தையும்
வீணாக்காதீர்கள்..
இரண்டையும் சிறப்பாக
பயன்படுத்துங்கள்..!

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட
வாழ்க்கைக்கு சேமிப்பு
மிக அவசியம்.

சேமிப்பு செழித்து வளர
சிறந்த வழி சிக்கனம்.

செலவழித்த பின் எஞ்சியதை
சேமிக்க வேண்டாம்.
சேமித்த பின் எஞ்சியதை
செலவிடுங்கள்.

என்றும் நினைவில் வைத்திருங்கள்
சேமிப்பு என்பது முதலீட்டின்
முன்நிபந்தனை.


பணம் உங்களை வந்தடைய முன்
அதை ஒருபோதும்
செலவிட வேண்டாம்.

ஒவ்வொரு முறையும் நீங்கள்
கடன் வாங்கும் போது
எதிர்கால சுயத்தை
கொள்ளையடிக்கிறீர்கள்.

சிறிய செலவுகளில் கவனம்
கொள்ளுங்கள். ஒரு சிறிய கசிவு
மிக பெரிய கப்பலை மூழ்கடிக்கும்.

வீண் செலவுகளை தவிர்த்து
சேமியுங்கள் அது உங்களை
காப்பாற்றும்.

பணக்காரன் ஆக வேண்டுமா.?
அதற்கு பணத்தைக்
குவிக்க வேண்டியது இல்லை.
தேவைகளை குறைத்துக்
கொள்ளுங்கள்.


ஆடம்பர செலவு என்பது
தரித்திரத்தை விலை கொடுத்து
வாங்குவதாகும்.

சம்பாதிப்பவனை விட
சேமிப்பவனே சிறந்தவன்.

சேமிப்பை உதாசீனம் செய்பவன்
தன் வாழ்வில் ஒருநாளும்
செழிமையை கொண்டுவர
முடியாது.

சிக்கனமாக வாழும் ஏழை சீக்கிரம்
செல்வந்தன் ஆவான்.

நல்ல குடும்பம் என்பது
வரவுக்கு மீறிய செலவு
செய்யாமல் இருப்பதாகும்.

சிக்கனமே செல்வம் தகுதிக்கு மேல்
வாழ்வதே தரித்திரம் என்பதை
மனதில் வைத்திருக்க வேண்டும்.

சிக்கனமும் சேமிப்பும்
செல்வம் பெருக உதவும்.


சேமித்த பணம் வறுமையில்
பயன் அளிக்கும்.
சேர்த்து வைத்த புண்ணியம்
மறுமையிலும் துணை நிற்கும்.

பணம் சம்பாதிப்பது மட்டுமே
வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கான
ஒரே வழி அல்ல.. ஆனால்
பெரும்பாலான சூழ்நிலையில்
பணத்தை அடிப்படையாக வைத்தே
மனிதன் மதிப்பிடப்படுகிறான் என்பது
தவிர்க்க முடியாத உண்மை.

சிக்கனம் சிறுசேமிப்பு கவிதை
சிக்கனமும் சேமிப்பும்
வாழ்க்கை தரத்தை
உயர்த்தும் இரு கருவிகள்.

பேராசை கொண்ட மனிதனுக்கு
உலகத்தையே கையில்
கொடுத்தாலும் திருப்தி
உண்டாவதில்லை.

செல்வாக்கு நீடித்திருக்க
வேண்டுமானால் செல்வத்தைப்
போலவே அதையும் சிக்கனமாகவே
செலவு செய்ய வேண்டும்.

செலவழிக்கும் பணத்துக்கு
கணக்கு எழுதிவை.
செலவழித்தது அவசியம்தானா
என்று சிந்தித்து பார்.
சிக்கனம் தானாகவே
வந்துவிடும்.

கஞ்சத்தனம் என்பது சிக்கனத்தின்
போலியான உணர்வு.
எதிர்கால பொறுப்புடன்
செயல்படுவது சிக்கனம்.
பொருள் ஆசையால்
இயங்குவது கஞ்சத்தனம்.

சிக்கனமாக இல்லாமல்
யாரும் செல்வந்தராக முடியாது.
சிக்கனமாக இருந்தால் யாரும்
வறியவராக முடியாது.

செல்வதுடன் இருக்க வேண்டுமென்றால்
சம்பாதிப்பதை போல் சேமிப்பிலும்
கவனம் வேண்டும்.

வளத்தின் ஒரு கை உழைப்பு.
ஒரு கை சிக்கனம்.

வாழ்க்கை ஒரு போர்க்களம்
அதில் சிக்கனமாக இருத்தல்
என்பது பாதி வெற்றிக்கு சமம்.

சிக்கனம் நமது வாழ்க்கையை
அழித்து விட கூடியதாக
இருக்க கூடாது.. மாறாக
சிக்கனம் நம் வாழ்க்கைக்கு
உயிர் கொடுப்பதாக
இருக்க வேண்டும்.

ஏழையாய் இருப்பதில்லை என்று
உறுதியாக முடிவு செய்யுங்கள்..
எப்பொழுதும் உங்களிடம்
இருப்பதை விட குறைவாகவே
செலவு செய்யுங்கள்.

சிக்கனம் என்பது
கஞ்சத்தனம் அல்ல..
செலவு செய்யும் விதம்.

மேலும் தொடர்ந்து படியுங்கள்..

திங்கள், 19 செப்டம்பர், 2022

கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

KARL MARX QUOTES IN TAMIL


தன் சிந்தனைகளால் காலங்களை கடந்து வாழும் கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்.

உலகில் மாபெரும் சிந்தனையாளர்கள் பட்டியலில் கார்ல் மார்க்ஸ்க்கு தனி இடம் உண்டு. உலகில் மார்க்சியம் ஏற்படுத்திய தாக்கம் அளப்பெரியது.

ரஷ்ய புரட்சி, கியூப புரட்சி, சீன புரட்சி, வியட்னாம் புரட்சி என்பவற்றில் கார்ல் மார்க்ஸின் மார்க்சிய கோட்பாடுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின.

வரலாற்றில் கார்ல் மார்க்ஸ்க்கு என்றும் தனி இடம் உண்டு.

கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

மதம் மனிதனை
உருவாக்கவில்லை..
மனிதன் தான் மதத்தினை
உருவாக்கினான்.

ஒருவன் தனக்காக தன்
வாழ்க்கைக்காக
உழைக்கும் போது மனிதனாகிறான்
ஒரு சமூகத்திற்காக மக்களுக்காக
வாழும்போது அவன் உண்மையான
மனிதனாகிறான்.

மாற்றம் என்பது
மானுட தத்துவம் மாறாது
என்ற சொல்லை தவிர
மற்றவை அனைத்தும்
மாறிவிடும்.

அன்பு நிறைந்த பெண்ணிடம்
காதல் கொள்வது என்பது
ஒரு மனிதனை மறுபடியும்
மனிதனாக்குகிறது.

பிறக்கும் குழந்தைகள்
அனைத்தும் உண்ணும்
வயிற்றுடன் மட்டும் பிறக்கவில்லை..
உழைக்கும் இரண்டு
கைகளுடனும் தான் பிறக்கின்றன.

மக்களை மகிழ்ச்சி அடைய
செய்யும் மனிதன் தான்
மகிழ்ச்சிகரமான மனிதன் என்று
வரலாறு வரவேற்கிறது.

மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக
இருப்பதற்கு முதலில் மதங்களை
இல்லாது ஒழிக்க வேண்டும்.

மாற்றங்கள் என்பதை
நிச்சயம் தவிர்க்க முடியாது..
மாற்றங்களை எதிர்கொள்ள
மனஉறுதி வேண்டும்.

முதலாளித்துவ சமூகத்தில்
பணத்திற்கு மதிப்பிருக்கும்
ஆனால் அதை நம்பி இருக்கும்
மனிதர்களுக்கு மதிப்பு
இருக்காது.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்

ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்
JAWAHARLAL NEHRU QUOTES IN TAMIL


பண்டிதர் நேரு என்று அழைக்கப்படும் இந்திய நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்.

நேருவின் பொன்மொழிகள்
ஜவஹர்லால் நேரு பொன்மொழிகள்
Jawaharlal Nehru Quotes In Tamil
ஜவஹர்லால் நேருவின் பொன்மொழிகள்

1.அறநெறியை மறந்துவிட்டால் அழிவொன்றே விளைவாகும்.

2. அன்பும் அடக்கமும் துன்பத்தால் கற்றுக் கொள்ளப்படும்.

3. இதயத்தை பொறுத்ததே இனிய சுதந்திரம்.

4. உலக வரலாற்றை படிப்பதை விட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.

5. நற்பண்பு இல்லாத அறிவு ஆபத்தானது. அறிவில்லாத நற்பண்பு பயனற்றது.

6. வாய்மையின் மிக நெருங்கிய நண்பன் அச்சமின்மை.


7. மனிதனை விட சக்தி வாய்ந்தது சூழ்நிலையே.

8. அச்சம் அறிவுக்கு ஆரம்பம் பொய்மையின் மிக நெருங்கிய நண்பன்.

9. மிரட்டிப் பணிய வைக்கும் எந்தச் செயலும் வெறுக்கத்தக்கதே.

10. கோபமாக பேசும் போது அறிவு தன் முகத்தை மூடிக்கொள்கிறது.

11. என்ன சொல்கிறாய் என்பது முக்கியமல்ல. என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்.


12. துணிந்து செயலாற்றுவர்களுக்கு தான் வெற்றி கிடைக்கும். கோழைகளின் பக்கம் வெற்றி தலை வைத்து படுப்பதில்லை.

13. ஒரு நாட்டின் உண்மை வலிமை அதன் மக்களின் கட்டுப்பாடு நிறைந்த உழைக்கும் ஆற்றலிலே காணப்படுகின்றது. கடுமையான உழைப்பே நமக்கு செல்வதை தரும் நமது வறுமையை ஒலிக்கும் எனவே நாம் அனைவரும் பாடுபட்டு உழைக்க வேண்டும்.

14. புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட வேண்டுமென்று நீங்கள் விரும்பினால் எந்த கொள்கையை நீங்கள் பின்பற்றிய போதிலும் மிகவும் கடுமையாக உழைத்தாக வேண்டும்.

15. பெண்களுக்கு உரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது.

Jawaharlal Nehru Quotes In Tamil
16. செயல் இல்லாத சிந்தனை அழிவைத் தரும். சிந்திக்காது புரிகின்ற செயல் அர்த்தமற்றது. எனவே சிந்தனையும் செயலும் ஒன்றுபட்டு முயற்சி வேண்டும்.

17. ஜாதகத்தையும் ஜோதிடத்தையும் நம்பி அதில் வாழ்க்கையை தேடாதீர்கள். நல்ல வாழ்க்கை என்பது கடும் உழைப்பின் பின்னால் மறைந்திருக்கிறது.

18. அடக்கம் நல்லது தான். ஆனால் அது அடிமை தனமாக இருக்கக்கூடாது.


19. கோழைத்தனம் என்பது அனைத்தையும் பாழாக்கும். வீரமே அனைத்தையும் வெல்லும். கோழைகள் தான் வன்முறையில் ஈடுபடுவார்கள். வீரர்கள் எப்போதும் சமாதானத்தை தான் நாடுவார்கள்.

20. திட்டமிடாத செயல்.. துடுப்பில்லாத படகுக்கு ஒப்பானது.

21. கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்சனைகளும் இல்லை என்றால் வாழ்க்கை சலிப்பாகிவிடும்.

22. செயலுக்கு உன்பே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது நீண்ட தூரம்.

23. முயற்சியுடன் செயல்படுகிறவர்களையே வெற்றி தழுவும்.

24. வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்.

25. விளைவுகளை வைத்து தான் செயல்களின் சிறப்பை மதிப்பிட முடியும்.

26. உண்மையை சில சமயங்களில் அடக்கிவைக்க முடியும். ஆனால் ஒடுக்கிவிட முடியாது.

27. அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து ஒன்றும் இல்லை.

28. கழிந்ததை கணக்கெடுத்து கொண்டே இருந்தால் இருப்பதையும் காணாமல் தொலைத்து விடுவோம்.

29. பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.

30. தோல்வி ஏற்படுவது அடுத்த காரியத்தை கவனமாக செய்.. என்பதற்கான எச்சரிக்கை.

31. அறியாமையே எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது.

மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..


சாதனை பொன்மொழிகள்

சாதனை பொன்மொழிகள்
SATHANAI QUOTES IN TAMIL


இந்த தொகுப்பு “சாதனை பொன்மொழிகள் (Sathanai Quotes in Tamil)” உள்ளடக்கியுள்ளது.

சாதனை பொன்மொழிகள்
தமிழ் பொன்மொழிகள்
Sathanai Quotes in Tamil
Ponmozhigal in Tamil
சாதனை பொன்மொழிகள் (Sathanai Quotes in Tamil)
செயல்கள் விதியின் விதைகள்..
அவை தான் இலக்குகள் என்ற
விருட்சங்களாக வளர்கின்றன..!

தனியாக நடக்க தயாராக இருங்கள்..
உங்களுடன் தொடங்கும் பலர்
நீங்கள் முடிக்கும் போது
உங்களுடன் இருக்க மாட்டார்கள்.!

நம் திறன்களை திறப்பதற்கான
சாவி தொடர் முயற்சி தானே
தவிர.. வலிமையோ
அறிவு கூர்மையோ அல்ல..!

உங்கள் இலக்குகளை
அதிபயங்கர உயரத்தில்
வையுங்கள்.. தோல்வி
அடைந்தாலும் உங்களின்
தோல்வி மற்றவர்களின்
வெற்றியை விட உயரத்தில்
இருக்கும்..!

போரார்வம் இல்லாமல்
பெரிதாக யாரும் இந்த
உலகில் சாதித்தது இல்லை..!

வெற்றியாளர்கள்
பரிசளிக்கப்பட்டவர்கள் அல்ல..
அவர்கள் கடினமான
உழைப்பால் வெற்றியை
பரிசாக பெற்றுக் கொண்டவர்கள்..!


எப்போதும் வலிமையானவர்கள்
சாதனையாளர்கள் ஆவது
கிடையாது.. தோல்வியிலும்
நம்பிக்கையை இழக்காதவர்களே
சாதனையாளர்கள்..!

வலிமை உடல் பலத்தால்
வருவது இல்லை..
வெல்ல முடியாத
வேட்கையினால் வருவது..!

வெற்றியின் வாசல் தேடி
வந்தவர்கள்.. நிச்சயம்
ஆயிரம் தோல்விகளிடம்
விலாசம் கேட்டு இருப்பார்கள்..!

வெற்றி என்பது புத்திசாலிகள
சொத்தல்ல.. அது முன்னேற
துடிக்கும் உழைப்பாளிக்கும்..
தன்னம்பிக்கைக்குமே
சொந்தம்..!

வெற்றி என்பது திடீரென
நிகழ்வது அல்ல..
வெற்றி என்பது நாம்
கற்றுக்கொண்டது..
பயிற்சி செய்தது மற்றும்
பகிர்ந்து கொண்டது..!


நேற்று வெற்றி பெற்றவர்
இன்றும் வெற்றி பெறலாம்..
ஆனால் நேற்று தோற்றவர்
தினமும் தோற்பதில்லை..!

கடினமான செயலின்
சரியான பெயர்தான் சாதனை..
சாதனையின் தவறான
விளக்கம் தான் கடினம்..!

வெற்றி பெற்ற பின் தன்னை
அடக்கி வைத்துக் கொள்பவன்..
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்..!

வாய்ப்புக்கள் உங்கள்
கதவை தட்டாத போது..
புது கதவை தயாரியுங்கள்..
உங்களது தோல்வியிலிருந்து
நீங்கள் எவ்வளவு கற்றுக்
கொள்கின்கிறீர்களோ..
அந்தளவு உங்கள் வெற்றி
தீர்மானிக்கப்படும்..!

தன்னம்பிக்கை பெற
என்ன வழி என்று ஆராய்வதன்
முதல்படி நமது பயத்தின்
காரணத்தைப் புரிந்து
கொள்ளுவது தான்..!

முடிந்த பிரச்சனைகளுக்காக
வருந்தாமல்.. வரும் காலத்தை
துணிந்து எதிர்கொள்..!

ஒரு காரியத்தில் வெற்றி
தோல்வியை கருதாது
தொடர்ந்து ஈடுபட
மனப்பக்குவமும்
மனஉறுதியும் தேவை..!


தொடங்குவதற்கு
மிகச் சரியான தருணம் என்று
எதுவும் கிடையாது..
இப்பொழுதே தொடங்குங்கள்
செய்யும் போது தான்
கற்றுக் கொள்ள முடியும்..!

தைரியமாக இருங்கள்
ஆபத்துக்களை விட்டு
விலகி ஓடாதீர்கள்.. அவற்றை
எதிர்கொள்ளுங்கள் ஏனெனில்
அனுபவத்துக்கு மாற்று என்று
ஒன்று இல்லவே இல்லை..!

தினமும் ஒரு சதவீதம்
உங்களை மேம்படுத்தினால் போதும்..
சிந்தியுங்கள் 100 நாட்களில்
முழுமையாய் மேம்பட்டவர்
ஆகிவிடுவீர்கள்..!

துணிவுமிக்கவர்களின்
அருகிலேயே எப்போதும்
அதிஷ்டம் நிற்கிறது..!

திறமை உப்பை விட மலிவானது..
ஆனால் திறமையானவர்களிடம்
இருந்து வெற்றியாளர்களை
பிரிப்பது கடின உழைப்பு மட்டுமே..!

மேலும் பதிவுகளை படியுங்கள்…

புதிய தமிழ் பொன்மொழிகள்

புதிய தமிழ் பொன்மொழிகள் – Tamil Ponmozhigal
NEW TAMIL PONMOZHIGAL

இந்த தொகுப்பு “புதிய தமிழ் பொன்மொழிகள் – New Tamil Ponmozhigal” உள்ளடக்கியுள்ளது.

புதிய தமிழ் பொன்மொழிகள் – New Tamil Ponmozhigal
புதிய தமிழ் பொன்மொழிகள்
தமிழ் பொன்மொழிகள்
New Tamil Ponmozhigal
Tamil Ponmozhigal
புதிய தமிழ் பொன்மொழிகள் – New Tamil Ponmozhigal
பல நேரங்களில் வெற்றிக்கும்
தோல்விக்கும் உள்ள வேறுபாடு
போரார்வமும் நம்பிக்கையும்
மட்டுமே..!

நோயை விட அச்சமே
அதிகம் கொள்ளும்..!

நேரம் உங்கள் வாழ்க்கையின்
பணம் அதுதான் உங்களிடம்
இருக்கும் ஒரே பணம்..
அதை எப்படி செலவழிப்பது
என்பதை நீங்கள் தான்
தீர்மானிக்க வேண்டும்..
நீங்கள் எச்சரிக்கையாக
இல்லை என்றால்.. பிறர் அதை
செலவழித்து விடுவார்கள்..!

நீங்கள் தேட வேண்டியது வாய்ப்பை..
பாதுகாப்பை அல்ல..
கரையில் நிற்கும் ஒரு படகு
பாதுகாப்பானது தான்.. ஆனால்
அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே
அரித்துவிடும்..!

நீங்கள் தினமும் காலையில்
எழும் போது இன்று இரவு
தன்னிறைவோடு உறங்க வேண்டும்
என்ற உறுதியோடு எழுங்கள்..!

நீங்கள் செய்யும் செயல் உங்களுக்கு
மகிழ்ச்சியை தராமல் போகலாம்..
ஆனால் எதையுமே செய்யாமல்
மகிழ்ச்சியாக இருப்பதற்கு
வாய்ப்பில்லை..!


நீங்கள் செய்யாமல் இருக்கும் வரை
உங்களுக்கு நேரம்
போதவே போதாது..!

நீங்கள் செய்தவற்றை மேலும்
சிறப்பாக செய்வதற்கான
ஒரே வாய்ப்பு.. தோல்வி
மட்டுமே..!

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்
என்பதை உங்களின் திறன்களை
விடவும் முடிவுகளே
தீர்மானிக்கின்றன..!

நீங்கள் எப்படி ஆக
நினைக்கிறீர்களோ.. அதையே
அடைகிறீர்கள்.. எனவே
வேண்டியதில் மட்டும்
கவனம் செலுத்துங்கள்..!

நீ கடைசியாக செய்த தவறே
உன்னுடைய சிறந்த ஆசான்..!


நீங்கள் உண்மையிலே
வாழ்க்கையை விரும்புகிறீர்கள்
என்றால் நேரத்தை வீணாக்காதீர்கள்..
நேரங்களால் உருவானதே
வாழ்க்கை..!

நீங்கள் உங்களால் முடியும்
என்று நினைத்தாலும்..
முடியாது என்று நினைத்தாலும்
அது சரியே..!

நீங்கள் அமைதியாக கடினமாக
உழையுங்கள்.. உங்களுடைய
வெற்றி உங்களுக்காக
சத்தமிடட்டும்..!

நிலவுக்கு குறி வையுங்கள்..
ஒரு வேளை நீங்கள்
தோற்றாலும் நட்சத்திரங்களில்
கால் பதிப்பீர்கள்..!

நிரந்தரமானவரைப் போல கனவு
காணுங்கள்.. ஆனால் இன்றே
இறப்பவர் போல் வாழுங்கள்..!

பாதையை கண்டுபிடியுங்கள்
அல்லது பாதையை உருவாக்குங்கள்..!

எப்போதும் செய்ய முடியாத
வேலையை செய்யவே முயலுங்கள்..
ஏனெனில் அப்போதுதான் அதை
எவ்வாறு செய்வதென்று
கற்றுக்கொள்ள முடியும்..!


நம்பிக்கை மட்டும் தான்
பயத்தை விட வலிமையானது..
நம்பிக்கை கொள்ளுங்கள்
வெற்றி பெறுங்கள்..!

நாம் வாழ்வில் செய்யும்
மிகப்பெரும் தவறு..
தவறு நடந்துவிடும் என்று
பயப்படுவது தான்..!

நாம் எதை தொடர்ந்து செய்கிறமோ
அதுவாகவே ஆகிறோம்..
எனவே திறமை என்பது
ஒரு செயல் அல்ல
அது ஒரு பழக்கம்..!

நம் தவறுகளில் இருந்து
மீண்டெழுந்து பின்
நிகழ்வதே வெற்றி..!

நம் அன்றாட பழக்கவழக்கங்கள்
சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல்..
வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை
எதிர்பார்க்க முடியாது..!

தோல்விக்கு இரண்டு காரணங்கள் தான்..
ஒன்று யோசிக்காமல் செய்வது..
இரண்டு யோசித்த பின்னும்
செய்யாமல் இருப்பது..!

மேலும் படியுங்கள்..